Monday, June 25, 2012

மரநேயம்

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்
-------------------------------------------------------

மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்...
 -------------------------------------------------------

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!
-------------------------------------------------------

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்
 -------------------------------------------------------

மரக்காதலன் குளிர்காற்றால் வருடிவிட
மேகக்காதலி சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழை
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. உலகத் தமிழர் இறையாண்மை - 01-07-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

3. உண்மை - 01-09-2012

4. நீலநிலா - 01-12-2012 

1 comment:

அன்பு நிலையம் said...

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்
-மின்மினி இதழ் மூலம் தங்களின் மரநேயம் தொகுதியை அறிந்துகொண்டேன். ஆனால் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது படிக்க நேர்ந்த போது மகிழ்ந்தேன்.

மர நேயம் மனிதனுக்கும் வேண்டும். ஆனால் ஒன்று தன்னலம் கருதாமல் மனிதன் இருக்கவேண்டும்.